Try error :java.sql.SQLException: Closed Resultset: next
275இடர், பாவம் என, மிக்க துக்க, வேட்கை,
        வெறுப்பே, என்று அனைவீரும் உலகை ஓடிக்
குடைகின்றீர்க்கு உலகங்கள் குலுங்கி நுங்கள்
       குறி நின்றது அமையாதே? யானேல், வானோர்-
அடையார் தம் புரம் மூன்றும் எரிசெய்தானை,
          அமரர்கள் தம் பெருமானை, அரனை, ஆரூர்
உடையானை, கடுகச் சென்று அடைவேன்; நும்மால்
    ஆட்டுணேன்; ஓட்டந்து ஈங்கு அலையேன்மி(ன்)னே!.