870 | “ஆதியான்”, அரி அயன், என்று அறிய ஒண்ணா அமரர் தொழும் கழலானை; அமலன் தன்னை; சோதி மதி கலை தொலைய, தக்கன், எச்சன், சுடர் இரவி அயில் எயிறு, தொலைவித்தானை; ஓதி மிக அந்தணர்கள் எரி மூன்று ஓம்பும் உயர் புகழ் ஆர் தரும் ஓமாம்புலியூர் மன்னும் தீது இல் திரு வடதளி எம் செல்வன் தன்னை; சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே!. |