231 | நெடியானும் மலரவனும் நேடி ஆங்கே நேர் உருவம் காணாமே சென்று நின்ற படியானை, பாம்புரமே காதலானை, பாம்பு அரையோடு ஆர்த்த படிறன் தன்னை, செடி நாறும் வெண் தலையில் பிச்சைக்கு என்று சென்றானை, நின்றியூர் மேயான் தன்னை,- கடி நாறு பூஞ்சோலை அம் தண் நாகைக்-காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே. |