352 | நென்னலை ஓர் ஓடு ஏத்திப் பிச்சைக்கு என்று வந்தார்க்கு, “வந்தேன்” என்று இல்லே புக்கேன்; அந் நிலையே நிற்கின்றார்; ஐயம் கொள்ளார்; அருகே வருவார் போல் நோக்குகின்றார்; “நும் நிலைமை ஏதோ? நும் ஊர்தான் ஏதோ?” என்றேனுக்கு ஒன்று ஆகச் சொல்லமாட்டார் மென்முலையார் கூடி விரும்பி ஆடும் வெண்காடு மேவிய விகிர்தனாரே. |