Try error :java.sql.SQLException: Closed Resultset: next
115கை எலாம் நெய் பாய, கழுத்தே கிட்ட, கால்
       நிமிர்த்து, நின்று உண்ணும் கையர் சொன்ன
பொய் எலாம் மெய் என்று கருதிப் புக்குப்
     புள்ளுவரால் அகப்படாது உய்யப் போந்தேன்;
செய் எலாம் செழுங் கமலப் பழன வேலித் திருப்
               புன்கூர் மேவிய சிவலோக(ன்)னை,
நெய்தல் வாய்ப் புனல் படப்பை நீடூரானை,
        -நீதனேன் என்னே நான் நினையா ஆறே!.