Try error :java.sql.SQLException: Closed Resultset: next
203பட அரவம் ஒன்று கொண்டு அரையில் ஆர்த்த
              பராபரனை, பைஞ்ஞீலி மேவினானை,
அடல் அரவம் பற்றிக் கடைந்த நஞ்சை அமுது
                   ஆக உண்டானை, ஆதியானை,
மடல் அரவம் மன்னு பூங்கொன்றையானை,
       மாமணியை, மாணிக்குஆய்க் காலன் தன்னை
நடல் அரவம் செய்தானை, நள்ளாற்றானை,-நான்
        அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.