| 225 | நடை உடைய நல் எருது ஒன்று ஊர்வான்        தன்னை; ஞானப் பெருங்கடலை; நல்லூர் மேய,   படை உடைய மழுவாள் ஒன்று ஏந்தினானை;                 பன்மையே பேசும் படிறன் தன்னை;   மடை இடையே வாளை உகளும் பொய்கை           மருகல் வாய்ச் சோதி மணி கண்ட(ன்)னை;-   கடை உடைய நெடுமாடம் ஓங்கு நாகைக்காரோணத்து                       எஞ்ஞான்றும் காணல் ஆமே. |