268நீதிஆய், நிலன் ஆகி, நெருப்பு ஆய், நீர் ஆய்,
        நிறை கால் ஆய், இவையிற்றின் நியமம் ஆகி,
பாதிஆய், ஒன்று ஆகி, இரண்டு ஆய், மூன்று
         ஆய், பரமாணு ஆய், பழுத்த பண்கள் ஆகி,
சோதி ஆய், இருள் ஆகி, சுவைகள் ஆகி. சுவை
          கலந்த அப்பால் ஆய், வீடு ஆய், வீட்டின்
ஆதி ஆய் அந்தம் ஆய், நின்றான் தன்னை-
        ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே!.