355 | தொட்டு இலங்கு சூலத்தர்; மழுவாள் ஏந்தி, சுடர்க் கொன்றைத்தார் அணிந்து, சுவைகள் பேசி, பட்டி வெள் ஏறு ஏறி, பலியும் கொள்ளார்; பார்ப்பாரைப் பரிசு அழிப்பார் ஒக்கின்றாரால்; கட்டு இலங்கு வெண்நீற்றர்; கனலப் பேசிக் கருத்து அழித்து வளை கவர்ந்தார்; காலை மாலை விட்டு இலங்கு சடைமுடியர்; வேத நாவர் வெண்காடு மேவிய விகிர்தனாரே. |