355தொட்டு இலங்கு சூலத்தர்; மழுவாள் ஏந்தி, சுடர்க்
          கொன்றைத்தார் அணிந்து, சுவைகள் பேசி,
பட்டி வெள் ஏறு ஏறி, பலியும் கொள்ளார்;
        பார்ப்பாரைப் பரிசு அழிப்பார் ஒக்கின்றாரால்;
கட்டு இலங்கு வெண்நீற்றர்; கனலப் பேசிக் கருத்து
          அழித்து வளை கவர்ந்தார்; காலை மாலை
விட்டு இலங்கு சடைமுடியர்; வேத நாவர் வெண்காடு
                            மேவிய விகிர்தனாரே.