6.36 திருப்பழனம்
திருத்தாண்டகம்
360அலை ஆர் கடல் நஞ்சம் உண்டார் தாமே;
        அமரர்களுக்கு அருள்செய்யும் ஆதி தாமே;
கொலை ஆய கூற்றம் உதைத்தார் தாமே; கொல்
       வேங்கைத் தோல் ஒன்று அசைத்தார் தாமே;
சிலையால் புரம் மூன்றும் எரித்தார் தாமே; தீ நோய்
              களைந்து என்னை ஆண்டார் தாமே;
பலி தேர்ந்து அழகு ஆய பண்பர்தாமே பழனநகர்
                            எம்பிரானார் தாமே.