| 375 | “பற்றார் புரம் எரித்தாய்!” என்றேன், நானே;             “பசுபதீ! பண்டரங்கா!” என்றேன், நானே;   “கற்றார்கள் நாவினாய்!” என்றேன், நானே; “கடு         விடை ஒன்று ஊர்தியாய்!” என்றேன், நானே;   “பற்று ஆனார் நெஞ்சு உளாய்!” என்றேன், நானே;      “பார்த்தற்கு அருள்செய்தாய்!” என்றேன், நானே;   “அற்றார்க்கு அருள்செய்யும் ஐயாற(ன்)னே!” என்று                என்றே நான் அரற்றி நைகின்றேனே!. |