512 | வெண்காட்டார்; செங்காட்டங்குடியார்; வெண்ணி நன்நகரார்; வேட்களத்தார்; வேதம் நாவார்; பண் காட்டும் வண்டு ஆர் பழனத்து உள்ளார்; பராய்த்துறையார்; சிராப்பள்ளி உள்ளார் பண்டு ஓர் வெண்கோட்டுக் கருங்களிற்றைப் பிளிறப் பற்றி உரித்து, உரிவை போர்த்த விடலை வேடம் விண் காட்டும் பிறை நுதலி அஞ்சக் காட்டி, வீழிமிழலையே மேவினாரே. |