687போர்த்து, ஆனையின் உரி-தோல் பொங்கப்பொங்க,
           புலி அதளே உடையாகத் திரிவான் தன்னை;
காத்தானை, ஐம்புலனும்; புரங்கள் மூன்றும்,
         காலனையும், குரைகழலால் காய்ந்தான் தன்னை;
மாத்து ஆடிப் பத்தராய் வணங்கும் தொண்டர்
       வல்வினைவேர் அறும் வண்ணம் மருந்தும் ஆகித்
தீர்த்தானை; திரு முதுகுன்று உடையான் தன்னை;
              தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!.