6.74 திருநாரையூர்
திருத்தாண்டகம்
734சொல்லானை, பொருளானை, சுருதியானை, சுடர்
            ஆழி நெடுமாலுக்கு அருள் செய்தானை,
அல்லானை, பகலானை, அரியான் தன்னை,
      அடியார்கட்கு எளியானை, அரண் மூன்று எய்த
வில்லானை, சரம் விசயற்கு அருள் செய்தானை,
        வெங்கதிரோன் மா முனிவர் விரும்பி ஏத்தும்
நல்லானை, தீ ஆடும் நம்பன் தன்னை, நாரையூர்
                     நன்நகரில் கண்டேன், நானே.