810 | கடி மலிந்த மலர்க்கொன்றைச் சடையான் கண்டாய்; கண் அப்ப விண் அப்புக் கொடுத்தான் கண்டாய்; படி மலிந்த பல்பிறவி அறுப்பான் கண்டாய்; பற்று அற்றார் பற்றவனாய் நின்றான் கண்டாய்; அடி மலிந்த சிலம்பு அலம்பத் திரிவான் கண்டாய்; அமரர் கணம் தொழுது ஏத்தும் அம்மான் கண்டாய்; கொடி மலிந்த மதில்-தில்லைக் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே. |