883பாதத்து அணையும் சிலம்பர் போலும்; பார் ஊர் விடை ஒன்று
                                     உடையார் போலும்;
பூதப்படை ஆள் புனிதர் போலும்; பூம் புகலூர் மேய புராணர்
                                              போலும்;
வேதப் பொருள் ஆய் விளைவார் போலும்; வேடம் பரவித்
                                      திரியும் தொண்டர்
ஏதப்படா வண்ணம் நின்றார் போலும் இன்னம்பர்த் தான்
                                      தோன்றி ஈசனாரே.