89 | கட்டங்கம் தாம் ஒன்று கையில் ஏந்தி, கடிய விடை ஏறி-காபாலி(ய்)யார்- இட்டங்கள் தாம் பேசி, இல்லே புக்கு, இடும் பலியும் இடக் கொள்ளார்;போவார் அல்லர்; பட்டிமையும் படிறுமே பேசுகின்றார்;பார்ப்பாரைப் பரிசு அழிப்பார் போல்கின்றார், தாம்; அட்டிய சில்பலியும் கொள்ளார்;விள்ளார் - அழகியரே, ஆமாத்தூர் ஐயனாரே!. |