939 | சங்க நிதி பதும நிதி இரண்டும் தத்து தரணியொடு வான் ஆளத் தருவரேனும், மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம், மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லார் ஆகில் அங்கம் எலாம் குறைந்து அழுகு தொழுநோயரா(அ)ய் ஆ உரித்துத் தின்று உழலும் புலையரேனும், கங்கை வார் சடைக் கரந்தார்க்கு அன்பர் ஆகில், அவர் கண்டீர், நாம் வணங்கும் கடவுளாரே!. |