934 | திருக்கோயில் இல்லாத திரு இல் ஊரும், திரு வெண் நீறு அணியாத திரு இல் ஊரும், பருக்கு ஓடிப் பத்திமையால் பாடா ஊரும், பாங்கினொடு பல தளிகள் இல்லா ஊரும், விருப்போடு வெண் சங்கம் ஊதா ஊரும், விதானமும் வெண்கொடியும் இல்லா ஊரும், அருப்போடு மலர் பறித்து இட்டு உண்ணா ஊரும், அவை எல்லாம் ஊர் அல்ல; அடவி- காடே!. |