960 | “மைப் படிந்த கண்ணாளும் தானும் கச்சி-மயானத்தான், வார்சடையான்” என்னின், அல்லான்; ஒப்பு உடையன் அல்லன்; ஒருவன் அல்லன்; ஓர் ஊரன் அல்லன்; ஓர் உவமன் இ(ல்)லி; அப் படியும் அந் நிறமும் அவ் வண்ண(ம்)மும் அவன் அருளே கண் ஆகக் காணின் அல்லால், “இப் படியன், இந் நிறத்தன், இவ் வண்ணத்தன், இவன் இறைவன்” என்று எழுதிக் காட்ட ஒணாதே. |