156 | விட்டு உருவம் கிளர்கின்ற சோதியான் ஆம்; விண்ணவர்க்கும் அறியாத சூழலான் ஆம்; பட்டு, உருவ மால்யானைத் தோல் கீண்டான் ஆம்; பல பலவும் பாணி பயின்றான் தான் ஆம்; எட்டு உருவ-மூர்த்தி ஆம், எண்தோளான் ஆம்; என் உச்சி மேலான் ஆம்; எம்பிரான் ஆம்; கட்டு உருவம் கடியானைக் காய்ந்தான் ஆகும்; கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே. |