Try error :java.sql.SQLException: Closed Resultset: next
184பார் ஆழி வட்டத்தார் பரவி இட்ட பல்மலரும்,
                நறும்புகையும், பரந்து தோன்றும்;
சீர் ஆழித் தாமரையின்மலர்கள் அன்னதிருந்திய
                மா நிறத்த சேவடிகள் தோன்றும்;
ஓர் ஆழித் தேர் உடைய இலங்கை வேந்தன் உடல்
       துணித்த இடர் பாவம் கெடுப்பித்து, அன்று,
போர் ஆழி முன் ஈந்த பொற்புத் தோன்றும்-பொழில்
           திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.