368நீண்டவர்க்கு ஓர் நெருப்பு உருவம் ஆனார் தாமே;
           நேரிழையை ஒரு பாகம் வைத்தார் தாமே;
பூண்டு அரவைப் புலித்தோல் மேல் ஆர்த்தார் தாமே;
            பொன் நிறத்த வெள்ளச்சடையார் தாமே;
ஆண்டு உலகு ஏழ் அனைத்தினையும் வைத்தார்
   தாமே; அங்கு அங்கே சிவம் ஆகி நின்றார் தாமே;
பாண்டவரில் பார்த்தனுக்குப் பரிந்தார் தாமே
                     பழனநகர் எம்பிரானார் தாமே.