368 | நீண்டவர்க்கு ஓர் நெருப்பு உருவம் ஆனார் தாமே; நேரிழையை ஒரு பாகம் வைத்தார் தாமே; பூண்டு அரவைப் புலித்தோல் மேல் ஆர்த்தார் தாமே; பொன் நிறத்த வெள்ளச்சடையார் தாமே; ஆண்டு உலகு ஏழ் அனைத்தினையும் வைத்தார் தாமே; அங்கு அங்கே சிவம் ஆகி நின்றார் தாமே; பாண்டவரில் பார்த்தனுக்குப் பரிந்தார் தாமே பழனநகர் எம்பிரானார் தாமே. |