34ஏறு ஏறி ஏழ் உலகம் உழிதர்வானே; இமையவர்கள்
                    தொழுது ஏத்த இருக்கின்றானே;
பாறு ஏறு படுதலையில் பலி கொள்வானே; பட அரவம்
                       தடமார்பில் பயில்வித்தானே;
நீறு ஏறு செழும் பவளக்குன்று ஒப்பானே; நெற்றிமேல்
                      ஒற்றைக்கண் நிறைவித்தானே;
ஆறு ஏறு சடைமுடி மேல் பிறை வைத்தானே;-அவன்
                   ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.