409ஆர்த்த எனக்கு அன்பன் நீயே என்றும்,
                  ஆதிக்கயிலாயன் நீயே என்றும்,
கூர்த்த நடம் ஆடி நீயே என்றும், “கோடிகா
                         மேய குழகா!” என்றும்,
பார்த்தற்கு அருள் செய்தாய் நீயே என்றும்,
            “பழையனூர் மேவிய பண்பா!” என்றும்,
தீர்த்தன் சிவலோகன் நீயே என்றும், நின்ற
               நெய்த்தானா! என் நெஞ்சு உளாயே.