488பங்கயத்தின் மேலானும், பாலன் ஆகி உலகு அளந்த
                            படியானும், பரவிக் காணாது
அங்கை வைத்த சென்னியராய், அளக்க மாட்டா அனல்
       அவன் காண்; அலை கடல் சூழ் இலங்கை வேந்தன்
கொங்கு அலர்த்த முடி நெரிய விரலால் ஊன்றும்
             குழகன் காண்; அழகன் காண்; கோலம் ஆய
மங்கையர்க்கு ஓர் கூறன் காண் வானோர் ஏத்தும் வலி
          வலத்தான் காண்; அவன் என் மனத்து உளானே.