557 | பண்ணின் இசை ஆகி நின்றாய், போற்றி! பாவிப்பார் பாவம் அறுப்பாய், போற்றி! எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய், போற்றி! என் சிந்தை நீங்கா இறைவா, போற்றி! விண்ணும் நிலனும் தீ ஆனாய், போற்றி! மேலவர்க்கும் மேல் ஆகி நின்றாய், போற்றி! கண்ணின் மணி ஆகி நின்றாய், போற்றி! கயிலை மலையானே, போற்றி போற்றி!. |