587 | பட்டு உடுத்து, பவளம் போல் மேனி எல்லாம் பசுஞ்சாந்தம் கொண்டு அணிந்து, பாதம் நோவ இட்டு எடுத்து நடம் ஆடி, இங்கே வந்தார்க்கு, “எவ் ஊரீர், எம்பெருமான்?” என்றேன்; ஆவி விட்டிடும் ஆறு அது செய்து, விரைந்து நோக்கி, வேறு ஓர் பதி புகப் போவார் போல, வட்டணைகள் பட நடந்து, மாயம் பேசி, வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே. |