77 | இடிப்பான் காண், என் வினையை;ஏகம்பன் காண்;எலும்பு ஆபரணன் காண்;எல்லாம் முன்னே முடிப்பான் காண்;மூஉலகும் ஆயினான் காண்; முறைமையால் ஐம்புரியும் வழுவா வண்ணம் படித்தான் தலை அறுத்த பாசுபதன் காண்; பராய்த்துறையான்;பழனம், பைஞ்ஞீலியான் காண்; கடித்தார் கமழ்கொன்றைக் கண்ணியான் காண் - காளத்தியான் அவன், என் கண் உளானே. |