92 | வீறு உடைய ஏறு ஏறி, நீறு பூசி, வெண்தோடு பெய்து, இடங்கை வீணை ஏந்தி, கூறு உடைய மடவாள் ஓர்பாகம் கொண்டு, குழை ஆட, கொடுகொட்டி கொட்டா, வந்து, பாறு உடைய படுதலை ஓர் கையில் ஏந்தி, பலி கொள்வார் அல்லர், படிறே பேசி; ஆறு உடைய சடைமுடி எம் அடிகள் போலும்-அழகியரே, ஆமாத்தூர் ஐயனாரே!. |