Try error :java.sql.SQLException: Closed Resultset: next
194ஊரானை, உலகு ஏழ் ஆய் நின்றான் தன்னை,
   ஒற்றை வெண் பிறையானை, உமையோடு என்றும்
பேரானை, பிறர்க்கு என்றும் அரியான் தன்னை,
    பிணக்காட்டில் நடம் ஆடல் பேயோடு என்றும்
ஆரானை, அமரர்களுக்கு அமுது ஈந்தானை,
      அருமறையால் நான்முகனும் மாலும் போற்றும்
சீரானை, -தென்கூடல்-திரு ஆலவா அய்ச்
       சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.