Try error :java.sql.SQLException: Closed Resultset: next
6.38 திருஐயாறு
திருத்தாண்டகம்
380ஓசை ஒலி எலாம் ஆனாய், நீயே; உலகுக்கு
                        ஒருவனாய் நின்றாய், நீயே;
வாசமலர் எலாம் ஆனாய், நீயே; மலையான்
                        மருகனாய் நின்றாய், நீயே;
பேசப் பெரிதும் இனியாய், நீயே; பிரானாய் அடி
                       என்மேல் வைத்தாய், நீயே;
தேச விளக்கு எலாம் ஆனாய், நீயே திரு ஐயாறு
                       அகலாத செம்பொன்சோதீ!.