385உற்றிருந்த உணர்வு எலாம் ஆனாய், நீயே;
      உற்றவர்க்கு ஓர் சுற்றம் ஆய் நின்றாய், நீயே;
கற்றிருந்த கலைஞானம் ஆனாய், நீயே; கற்றவர்க்கு
               ஓர் கற்பகம் ஆய் நின்றாய், நீயே;
பெற்றிருந்த தாய் அவளின் நல்லாய், நீயே;
        பிரானாய் அடி என்மேல் வைத்தாய், நீயே;
செற்றிருந்த திரு நீலகண்டன், நீயே திரு ஐயாறு
                     அகலாத செம்பொன்சோதீ!.