57 | அரும்பித்த செஞ்ஞாயிறு ஏய்க்கும்(ம்) அடி; அழகு எழுதல் ஆகா அருள் சேவடி; சுரும்பித்த வண்டு இனங்கள் சூழ்ந்த(வ்) அடி; சோமனையும் காலனையும் காய்ந்தவ(வ்) அடி; பெரும் பித்தர் கூடிப் பிதற்றும்(ம்) அடி; பிழைத்தார் பிழைப்பு அறிய வல்ல(வ்) அடி; திருந்து நீர்த் தென்கெடில நாடன்(ன்) அடி-திரு வீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி |