836கந்த மலர்க் கொன்றை அணி சடையான் தன்னை;
              கதிர்விடு மா மணி பிறங்கு கனகச்சோதிச்
சந்த மலர்த் தெரிவை ஒரு பாகத்தானை; சராசர
                    நல்-தாயானை; நாயேன் முன்னைப்
பந்தம் அறுத்து, ஆள் ஆக்கி, பணி கொண்டு,
     ஆங்கே பன்னிய நூல்-தமிழ்மாலை பாடுவித்து, என்
சிந்தை மயக்கு அறுத்த திரு அருளினானை;
           செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.