841அரிய பெரும் பொருள் ஆகி நின்றான் தன்னை;
              அலைகடலில் ஆலாலம் அமுது செய்த
கரியது ஒரு கண்டத்து, செங்கண் ஏற்று, கதிர்
                  விடு மா மணி பிறங்கு காட்சியானை;
உரிய பல தொழில் செய்யும் அடியார் தங்கட்கு
    உலகம் எலாம் முழுது அளிக்கும் உலப்பு இலானை;
தெரிவை ஒருபாகத்துச் சேர்த்தினானை;
          செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.