968 | நிற்பனவும், நடப்பனவும், நிலனும், நீரும், நெருப்பினொடு, காற்று ஆகி, நெடு வான் ஆகி, அற்பமொடு பெருமையும் ஆய், அருமை ஆகி, அன்பு உடையார்க்கு எளிமையது ஆய், அளக்கல் ஆகாத் தற்பரம் ஆய், சதாசிவம் ஆய், தானும் யானும் ஆகின்ற தன்மையனை நன்மையோடும் பொற்பு உடைய பேசக் கடவோம்; பேயர் பேசுவன பேசுதுமோ? பிழை அற்றோமே. |