Try error :java.sql.SQLException: Closed Resultset: next
294பிற நெறி ஆய், பீடு ஆகி, பிஞ்ஞகனும் ஆய்,
               பித்தனாய், பத்தர் மனத்தினுள்ளே
உற நெறி ஆய், ஓமம் ஆய், ஈமக்காட்டில்,
               ஓரிபல விட, நட்டம் ஆடினானை;
துறநெறி ஆய், தூபம் ஆய், தோற்றம் ஆகி,
      நாற்றம் ஆய், நல் மலர்மேல் உறையா நின்ற
அறநெறியை; ஆரூரில் அம்மான்தன்னை;-
          அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!.