301அக்கு உலாம் அரையினன்காண்; அடியார்க்கு என்றும்
         ஆர் அமுது ஆய் அண்ணிக்கும் ஐயாற்றான்காண்;
கொக்கு, உலாம் பீலியொடு, கொன்றை மாலை,
               குளிர்மதியும், கூர் அரவும், நீரும், சென்னித்
தொக்கு உலாம் சடையினன்காண்; தொண்டர் செல்லும்
             தூநெறிகாண்-வானவர்கள் துதி செய்து ஏத்தும்,
திக்கு எலாம் நிறைந்த புகழ்த் திரு ஆரூரில்-திரு
                     மூலட்டானத்து எம் செல்வன் தானே.