161வேதங்கள் வேள்வி பயந்தார் போலும்;
     விண்ணுலகும் மண்ணுலகும் ஆனார் போலும்;
பூதங்கள் ஆய புராணர் போலும்;
         புகழ வளர் ஒளி ஆய் நின்றார் போலும்;
பாதம் பரவப்படுவார் போலும்; பத்தர்களுக்கு
                     இன்பம் பயந்தார் போலும்;
ஏதங்கள் ஆன கடிவார் போலும்-இடைமருது
                            மேவிய ஈசனாரே.