6.3 திருஅதிகை வீரட்டானம்
ஏழைத் திருத்தாண்டகம்
22வெறி விரவு கூவிளநல்-தொங்கலானை, வீரட்டத்தானை,
                              வெள் ஏற்றினானை,
பொறி அரவினானை, புள் ஊர்தியானை,
               பொன்நிறத்தினானை, புகழ் தக்கானை,
அறிதற்கு அரிய சீர் அம்மான் தன்னை,
             அதியரையமங்கை அமர்ந்தான் தன்னை,
எறி கெடிலத்தானை, இறைவன் தன்னை, - ஏழையேன்
                      நான் பண்டு இகழ்ந்த ஆறே!