637மகிழ்ந்தானை, கச்சி ஏகம்பன் தன்னை, மறவாது
                கழல் நினைந்து வாழ்த்தி ஏத்திப்
புகழ்ந்தாரைப் பொன்னுலகம் ஆள்விப்பானை, பூத
           கணப்படையானை, புறங்காட்டு ஆடல்
உகந்தானை, பிச்சையே இச்சிப்பானை, ஒண்
             பவளத்திரளை, என் உள்ளத்துள்ளே
திகழ்ந்தானை, திரு ஆனைக்கா உளானை,
          செழுநீர்த்திரளை, சென்று ஆடினேனே.