Try error :java.sql.SQLException: Closed Resultset: next
679மாண்டார் எலும்பு அணிந்த வாழ்க்கையானை,
     மயானத்தில் கூத்தனை, வாள் அரவோடு என்பு
பூண்டானை, புறங்காட்டில் ஆடலானை, போகாது
         என் உள் புகுந்து இடம் கொண்டு என்னை
ஆண்டானை, அறிவு அரிய சிந்தையானை,
    அசங்கையனை, அமரர்கள் தம் சங்கை எல்லாம்
கீண்டானை, கீழ்வேளூர் ஆளும் கோவை,
            கேடு இலியை, நாடுமவர் கேடு இலாரே.