686புகழ் ஒளியை, புரம் எரித்த புனிதன் தன்னை,
      பொன் பொதிந்த மேனியனை, புராணன் தன்னை,
விழவு ஒலியும் விண் ஒலியும் ஆனான் தன்னை,
               வெண்காடு மேவிய விகிர்தன் தன்னை,
கழல் ஒலியும் கைவளையும் ஆர்ப்ப ஆர்ப்ப,
         கடைதோறும் இடு பிச்சைக்கு என்று செல்லும்
திகழ் ஒளியை, திரு முதுகுன்று உடையான்
     தன்னை, தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!.