788சிவன் ஆகி, திசைமுகனாய், திருமால் ஆகி,
        செழுஞ் சுடர் ஆய், தீ ஆகி, நீரும் ஆகி,
புவன் ஆகி, புவனங்கள் அனைத்தும் ஆகி,
          பொன் ஆகி, மணி ஆகி, முத்தும் ஆகி,
பவன் ஆகி, பவனங்கள் அனைத்தும் ஆகி,
            பசு ஏறி, திரிவான் ஓர் பவனாய், நின்ற
தவன் ஆய தலையாலங்காடன் தன்னை
              சாராதே சால நாள் போக்கினேனே!.