Try error :java.sql.SQLException: Closed Resultset: next
873பாங்கு உடைய எழில் அங்கி அருச்சனை முன் விரும்பப்
      பரிந்து அவனுக்கு அருள் செய்த பரமன் தன்னை;
பாங்கு இலா நரகு அதனில்-தொண்டர் ஆனார் பாராத
                    வகை பண்ண வல்லான் தன்னை;
ஓங்கு மதில் புடை தழுவும் எழில் ஓமாம்புலியூர், உயர்
            புகழ் அந்தணர் ஏத்த, உலகர்க்கு என்றும்
தீங்கு இல், திரு வடதளி எம் செல்வன் தன்னை;
            சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே!.