Try error :java.sql.SQLException: Closed Resultset: next
6.29 திருஆரூர்
திருத்தாண்டகம்
290திருமணியை, தித்திக்கும் தேனை, பாலை,
     தீம்கரும்பின், இன்சுவையை, தெளிந்த தேறல்,
குருமணியை, குழல் மொந்தை தாளம் வீணை
          கொக்கரையின் சச்சரியின் பாணியானை,
பரு மணியை, பவளத்தை, பசும்பொன், முத்தை,
    பருப்பதத்தில் அருங்கலத்தை, பாவம் தீர்க்கும்
அருமணியை, ஆரூரில் அம்மான்தன்னை,-
         அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!.