348புகை எட்டும், போக்கு எட்டும், புலன்கள் எட்டும்,
      பூதலங்கள் அவை எட்டும், பொழில்கள் எட்டும்,
கலை எட்டும், காப்பு எட்டும், காட்சி எட்டும், கழல்
             சேவடி அடைந்தார் களை கண் எட்டும்,
நகை எட்டும், நாள் எட்டும், நன்மை எட்டும், நலம்
          சிறந்தார் மனத்து அகத்து மலர்கள் எட்டும்,
திகை எட்டும், தெரிப்பதற்கு முன்னோ? பின்னோ?
            திரு ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.