81 | எல்லாம் முன் தோன்றாமே தோன்றினான் காண்; ஏகம்பம் மேயான் காண்;இமையோர் ஏத்தப் பொல்லாப் புலன் ஐந்தும் போக்கினான் காண்; புரிசடை மேல் பாய் கங்கை பூரித்தான் காண்; நல்ல விடை மேற்கொண்டு, நாகம் பூண்டு, நளிர் சிரம் ஒன்று ஏந்தி, ஓர் நாண் ஆய் அற்ற கல் ஆடை மேல் கொண்ட காபாலீ காண் - காளத்தியான் அவன், என் கண் உளானே. |