6.11 திருப்புன்கூரும் திரு நீடூரும்
திருத்தாண்டகம்
107பிறவாதே தோன்றிய பெம்மான் தன்னை,
       பேணாதார் அவர் தம்மைப் பேணாதானை,
துறவாதே கட்டு அறுத்த சோதியானை, தூ
     நெறிக்கும் தூ நெறி ஆய் நின்றான் தன்னை;
திறம் ஆய எத்திசையும் தானே ஆகித் திருப்
              புன்கூர் மேவிய சிவலோக(ன்)னை,
நிறம் ஆம் ஒளியானை, நீடூரானை,-நீதனேன்
                என்னே நான் நினையா ஆறே!.